#BREAKING : சாத்தான்குளம் விவகாரத்தில் முதல்வரை விசாரிக்க கோரிய வழக்கு – தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

Published by
Venu

சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ், காவல் மரணம் தொடர்பாக  முதல்வர் பழனிசாமி மீது விசாரணை நடத்தக்கோரிய வழக்கினை   உச்சநீதிமன்றம்  தள்ளுபடி செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.இதற்கு இடையில் இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டார்.அவரது அறிக்கையில், கோவில்பட்டி சிறையில் தந்தை ஜெயராஜ் உடல்நலக்குறைவு காரணமாகவும், மகன் பென்னிக்ஸ் மூச்சுத் திணறல் காரணமாகவும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.ஆனால் முதலமைச்சரின் இந்த அறிக்கைக்கு கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அவரது வழக்கில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக முதல்வர் கூறியதால் அவரை விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த வழக்கினை உச்சநீதிமன்றம் இன்று  விசாரித்து. அப்பொழுது வழக்கினை தள்ளுபடி செய்வதாக  நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

1 hour ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

2 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

2 hours ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

3 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

3 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

4 hours ago