லாக்கப் அத்துமீறல்.! நீதித்துறையும் காவல்துறையும் கடுமையாக சாடிய நடிகர் சூர்யா.!

Published by
மணிகண்டன்

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் ஸ்சிறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து குறித்து நடிகர் சூர்யா ஒரு விரிவான கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். ‘அதிகார அத்துமீறல்’ முடிவுக்கு வர வேண்டும் எனும் தலைப்பில் அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் மகன் ஃபென்னிக்ஸ் இருவரும் சிறையில் மரணம் அடைந்தத சமபவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த லாக்கப் உயிரிழப்பு சம்பவம் இந்தியாவையே அதிர வைத்துள்ளது. இதற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உட்பட பலரும் தங்களது எதிர்ப்புக்குரலை பலமாக பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது இந்த லாக்கப் மரணம் குறித்து குறித்து நடிகர் சூர்யா ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். ‘அதிகார அத்துமீறல்’ முடிவுக்கு வர வேண்டும் எனும் தலைப்பில் அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ‘ லாக்கப் அத்துமீறல் காவல்துறையினரின் மாண்பை குறைக்கும் செயல். இது ஏதோ ஒரு இடத்தில் தவறுதலாக நடந்த சம்பவம் அல்ல.’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘ சிறையில் அடைப்பதற்கு முன்னர், தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் இருவரையும் அரசு மருத்துவர் பரிசோதனை செய்து நலமாக இருப்பதாக சான்று அளித்துள்ளார். அதேபோல மாஜிஸ்ட்ரேட் அவர்களை பரிசோதிக்காமலே சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். சிறையில் முறையான சோதனைகளும் நடக்கவில்லை. இத்தகைய கடமை மீறல் செயல்கள் குடிமக்களின் உரிமை மீதான அலட்சியத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது.’ என தனது குற்றச்சாட்டை பலமாக எடுத்துரைத்துள்ளார்.

‘காவல்துறையினர் தவறு செய்தால் அவர்களை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்வது காவல்துறைக்கு தண்டனை காலம் போல ஒரு பிம்பம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.’ என குற்றம் சாட்டியுள்ளார்.

‘கொரோனா காலத்தில் அர்ப்பணிப்புடன் நாட்டு மக்களை பாதுகாக்க கொரோனா தடுப்பு களத்தில் முன் வரிசையில் நிற்கும் காவல்துறையினருக்கு தான் தலைவணங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் அதிகாரத்தை பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தும் காவல்துறையினருக்கு தனது கடும் கண்டனங்களை பதிவு செய்வதாக அந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் சொன்ன தகவல்!

சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…

9 hours ago

“சாரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம்”…வலியிலும் வரலாறு படைத்த ரிஷப் பண்ட்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…

10 hours ago

இன்ஸ்டா பிரபலம் இலக்கியா விவகாரம் : திலீப் சுப்பராயன் விளக்கம்!

சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…

11 hours ago

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு : மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…

11 hours ago

திரைப்படமாக உருவாகும் ராமதாஸ் பயோபிக்..! படக்குழு வெளியிட்ட போஸ்ட்டர்கள்..!

சென்னை :  பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…

12 hours ago

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

பீகார் :  மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…

12 hours ago