ஆகஸ்ட் 14ம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இந்தாண்டு முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14-ம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கப்பட இருந்த இனிப்பு பொங்கல், கோடை விடுமுறை முடிந்தும் பள்ளிகள் திறக்கப்படாததால் அப்போது வழங்கப்படவில்லை. இதனால், ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.