ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும் தாஜ்மகால்….

Published by
Kaliraj

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் முழு  ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு அமலில் இருந்த நிலையில் தர்போது படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ஆறு மாதங்களுக்குப் பின், இன்று திறக்கப்படுகிறது.

தாஜ்மஹால், கடந்த  மார்ச், 17ம் தேதி மூடப்பட்டது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், புராதனச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்களை திறக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனினும், தாஜ்மஹாலும், ஆக்ரா கோட்டையும் திறக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில், ஆறு மாதங்களுக்குப் பின், சுற்றுலா பயணியருக்காக, தாஜ்மஹால் இன்று திறக்கப்படுகிறது. தாஜ்மஹாலுக்குள் செல்ல, ஒரு நாளுக்கு, 5,000 சுற்றுலா பயணியருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ரா கோட்டையும் இன்று திறக்கப்படுகிறது. இங்கு, ஒரு நாளுக்கு, 2,500 பேருக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள், சுற்றுலா பயணியருக்கு விதிக்கப்பட்டுள்ளன. மேலும்  உரிமம் பெற்ற வழிகாட்டிகளுக்கு மட்டுமே, உள்ளே நுழைய அனுமதி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தாஜ்மஹால், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், ஆக்ரா கோட்டை, ஞாயிற்றுக் கிழமையிலும் மூடப்பட்டிருக்கும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

சரோஜாதேவி மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது…மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சரோஜாதேவி மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது…மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…

4 minutes ago

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்து ஐஏஎஸ் அதிகாரி அமுதா விளக்கம்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…

44 minutes ago

நடிகை சரோஜா தேவி மறைவு : நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…

2 hours ago

FIFA கிளப் உலகக் கோப்பை 2025: சாம்பியன் பட்டத்தை வென்ற செல்சியா எஃப்சி!

பாரிஸ்  : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…

2 hours ago

நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…

3 hours ago

“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!

டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…

4 hours ago