சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதன்பின் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நோய் அறிகுறி இல்லாதவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். முக்கியமாக சமூக விலகலை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தமிழக்தில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி வெளியே சுற்றிய 94 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவித்துள்ளனர். சுமார் 72 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து 144 தடையை மீறி வெளியே வாகனங்களில் சுற்றியதுக்கு சுமார் 24 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 14க்கு பிறகு கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து பள்ளி தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…