Selaiyur SSI John Selvaraj [File Image]
Selaiyur SSI : வங்கதேசத்தில் ஊடுருவ முயன்றதாக தாம்பரம், சேலையூர் சிறப்பு SI அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலையூர் காவல்நிலைய சிறப்பு துணை காவல் ஆய்வாளர் (SSI) ஜான் செல்வராஜ், இன்று வங்கதேச நாட்டு எல்லையில் ஊடுருவ முயன்றதாக அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
சேலையூர் காவல்நிலைய SSI ஆக பணியாற்றி வந்த ஜான் செல்வராஜ், கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் பணியில் தொடர்ந்து ஈடுப்பட்டு வந்துள்ளார். இவர் அடிக்கடி விடுமுறை எடுக்கும் பழக்கத்தையும் கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. ஏற்கனவே அதிக விடுப்பு காரணமாக ஒருமுறை சஸ்பெண்ட் செய்யப்பட்டும் உள்ளார் என கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் ஏற்கனவே மருத்துவ விடுப்பில் இருந்த ஜான் செல்வராஜ் , கூடுதலாக 2 நாட்கள் மருத்துவ விடுப்புக்கும் விண்ணப்பித்துள்ளார் என கூறப்படுகிறது. இப்படியான சூழலில் தான் தற்போது ஜான் செல்வராஜ், சட்டவிரோதமாக இந்திய எல்லையை கடந்து வங்கதேச எல்லைக்குள் ஊடுருவ முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால், ஜான் செல்வராஜுக்கு சர்வதேச சட்டவிரோத கும்பலுடன் தொடர்பு எதுவும் உள்ளதா என்ற கோணத்தில் வங்கதேச ராணுவம் தொடர் விசாரணை செய்து வருகிறது. ஜான் துரைராஜ் சமீபத்தில் கண்ணகிநகர் காவல் நிலையத்திற்கு மாற்றபடுவதற்கு ஆணை பெற்றுள்ளார் என்றும் இன்னும் பணிமாறவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழக காவல்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…