ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்திற்கு சென்னை தலைமை செயலகத்தில் அரசு பணிநியமன ஆணை வழங்கினார் தமிழக முதல்வர்.
சாத்தான்குளம் பகுதியில் வசித்து வந்த தந்தை ஜெய்ராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர்களது மரணம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவர்களது மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்திற்கு சென்னை தலைமை செயலகத்தில் அரசு பணிநியமன ஆணை வழங்கினார்.
அரசு பணிநியமன ஆணை பெற்ற பின் ஜெயராஜ் மகள் பெர்ஸிஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் பேசுகையில், ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கை விரைந்து விசாரித்து தண்டனை பெற்று தர வேண்டும் என்றும், நீதியை நிலைநாட்ட தமிழக அரசு உதவும் என நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…