நாங்குநேரி தொகுதியில் தனித்துப்போட்டியிடுவது குறித்து முடிவு செய்யவில்லை-தமிழ்நாடு காங்கிரஸ்

Published by
Venu

நாங்குநேரி தொகுதியில் தனித்துப்போட்டியிடுவது குறித்து முடிவு செய்யவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரியில் நேற்று  செயல்வீரர்கள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி  கலந்துகொண்டு பேசினார்.அவர் பேசுகையில்,தென் மாநிலம் காங்கிரஸ் கட்சியின் உயிர்நாடி. தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என்பதை பற்றி விவாதம் நடத்தவே இந்த கூட்டம் . 50 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருப்பது ஏன்? நம்மால் தனித்து நின்று வெற்றி பெற முடியாதா? என்று தொண்டர்கள் மத்தியில் கேள்வி எழுப்பினார்.மேலும் நாங்குநேரி தொகுதியில் தனித்துப் போட்டியிடுவது குறித்து தீர்மானம் நிறைவேறியதாக தகவல் வெளியானது.

ஏற்கனவே அழகிரி பேசியது திமுக -காங்கிரஸ் கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ்  தனித்து போட்டியிடும் என்று வெளியான செய்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார்  நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிவகுமாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒன்றை  அனுப்பியுள்ளார்.அதில்,நாங்குநேரியில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.

நாங்குநேரி தொகுதியில் தனித்துப்போட்டியிடுவது குறித்து எந்தத் தீர்மானமும் முன்மொழியப்படவோ, வழிமொழியப்படவோ, நிறைவேற்றப்படவோ இல்லை .நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் தன்னிச்சையாக சில தீர்மான நகல்களை கூட்டத்திற்கு முன்பாக வெளியிட்டுள்ளார்.ஒழுங்கு நடவடிக்கை குழு முன் கடிதம் கண்ட 7 நாட்களுக்குள் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Published by
Venu

Recent Posts

‘வக்பு சட்டத்தால் இஸ்லாமிய மக்கள் பெரும் பாதிப்பு’… ஆதவ் அர்ஜுனா காட்டம்.!

‘வக்பு சட்டத்தால் இஸ்லாமிய மக்கள் பெரும் பாதிப்பு’… ஆதவ் அர்ஜுனா காட்டம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகதின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சென்னையில் இன்று மதியம்…

9 minutes ago

நீலகிரியில் வெளுத்து வாங்க போகும் மழை.! ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்.!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா வடதமிழக பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு…

1 hour ago

‘கணவரை பிரிய 3-வது நபரே காரணம்’ – ஆர்த்தி பளிச்.! அப்படி என்ன சொன்னார்.?

சென்னை : ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து விவகாரம் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும்…

2 hours ago

‘வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இல்லை’ – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு .!

சென்னை : மின் கட்டணத்தை 3% உயர்த்த மின் வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது என தகவல்…

2 hours ago

கல்குவாரி விபத்தில் 5 பேர் பலியான சோகம்.! பேரிடர் மீட்பு படை விரைவு..,

சிவகங்கை: சிங்கம்புணரி அருகே தனியார் கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…

2 hours ago

முடி இருக்காது ப்ரோ….கடுப்பாகி திக்வேஷ் ரதியை எச்சரித்த அபிஷேக் ஷர்மா!

லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…

8 hours ago