தமிழகத்தில் இன்றும்,நாளையும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சலூன்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பின் காரணமாக வருகின்ற மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கின் போது அனைத்து தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள்,ஐ.டி.நிறுவனங்கள்,பூங்காங்கள்,அருங்காட்சியகங்கள்,சலூன்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும்,பேருந்து,கார்கள் மற்றும் ஆட்டோக்கள் ஓடாது என்றும்,டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும்,முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி கடைகள், மளிகைக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கவும்,நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,தமிழகத்தில் வரும் திங்கள் அதிகாலை 4 மணி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் முன்னேற்பாடுகளை செய்துகொள்ள இன்றும் நாளையும் அத்தியாவசிய கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
அதன்படி,அனைத்து சலூன் கடைகள் இன்றும்,நாளையும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…