தமிழக சுகாதாரத்துறையின் பணிகளுக்கு முதல்வரிடம் பாராட்டு தெரிவித்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது. ஆகவே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று தமிழகம் வந்துள்ளார்.சென்னை பெரியமேட்டில் உள்ள மருந்து பரிசோதனை ஆய்வக கிடங்கில் வைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பார்வையிட்டார். பின்பு தமிழக முதலமைச்சர் பழனிசாமியுடன் ஆலோசனை மேற்கொண்டார் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்.
ஆலோசனைக்குப் பின் சென்னையில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கொரோனா தடுப்பூசி ஒத்திகை 3 மாநிலங்களில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.தமிழக சுகாதாரத்துறையின் பணிகளுக்கு முதல்வரிடம் பாராட்டு தெரிவித்தேன்.கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.தமிழக அரசும் ,சுகாதாரத் துறையும் செய்து வரும் பணிகள் உயர்ந்த பாராட்டுக்கு தகுதியானவை என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…