கொரோனாவின் மூன்றாம் அலை வந்தாலும் தமிழக அரசு வென்று காட்டும் – அமைச்சர் நாசர்!

Published by
Rebekal

தமிழகத்தில் கொரோனாவின் மூன்றாம் அலை வந்தாலும் அதை தமிழக அரசு வென்று காட்டும் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக பாதிப்புகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில், கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை ஆவடியில் மகளிர் சுய உதவி குழுக்களுடன் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வீடுகள் தோறும் காய்ச்சல் கணக்கெடுப்பு குறித்த துவக்க விழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பின்னர் இருவரும் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு முன்பதாக அரசு ஆவடி அரசு மருத்துவமனையில் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் கருவியை அமைச்சர் நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் மருத்துவமனைக்கு வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நாசர், திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் ஆய்வு செய்து வருவதாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவின் 3ஆம் அலை வந்தாலும் தமிழக அரசு அதனை வென்று காட்டும் எனவும் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

16 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

16 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

17 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

17 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

18 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

19 hours ago