[file image]
மத்திய அரசின் கடனை ஒப்பிடும்போது தமிழ்நாடு அரசின் கடன் குறைவாக உள்ளது என தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ரூபாய் கணக்கில் கடனை ஒப்பிடக்கூடாது, உற்பத்தியில் எவ்வளவு கடன் என்பது முக்கியம். இதனால் கடனை பார்க்கும்போது அந்த மாநிலம் அல்லது நாட்டின் உற்பத்தியை பார்க்கவேண்டும்.
அதாவது, கடனை ரூபாயில் கணக்கிடாமல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கணக்கிட வேண்டும். தமிழ்நாடு அரசின் கடன் GDP-யில் 27 சதவிகிதம்தான். ஆனால் மத்திய அரசின் கடன் GDP-யில் 60% இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் இது அதிகமானது. தமிழகத்தில் 16, 17 சதவீதம் உற்பத்தியில் இருந்த கடனை 27 சதவிகிதம் வந்தது கடந்த 2014-21ல் இருந்த அதிமுக ஆட்சி.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு கடனை ஒரு சதவீதத்திற்குள்ளேவே வைத்துள்ளோம். மேலும், 9 ஆண்டுகளில் முதல் முறையாக வருவாய் பற்றாக்குறையும், மொத்த கடன் வாங்குறதையும் ரூபாய் கணக்கிலேயே குறைத்தது எங்கள் ஆட்சியில் தான். இதனை மேலும் கட்டுப்படுத்த படிப்படியாக செயல்பட்டு வருகிறோம் எனவும் கூறினார்.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…
சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…