AKS Vijayan [Representative image]
தமிழ்நாடு அரசுக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன்
மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மூன்றாவது முறையாக தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி அரசின் சிறப்பு பிரதிநிதி என்பவர், தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே அரசு ரீதியான அனைத்து ஏற்பாடுகளையும், அலுவலக வேலைகளையும் செய்பவர்.
தமிழக அமைச்சர்கள், முதல்வர் டெல்லிக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்ளும் போதும் தேவையான நடவடிக்கைகளை இவரே செய்கிறார். கடந்த 2021இல் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற போது, ஜூன் மாதம் ஏ.கே.எஸ்.விஜயன் முதன்முறையாக டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
அதன்பிறகு இரண்டாவது முறையாக 2022 ஜூன் மாதமும் தற்போது, அவரது பதவிக்காலம்(ஓராண்டு) முடிந்துள்ள நிலையில் 3-வது முறையாக மீண்டும் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…
மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…
டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…
சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…