ஆளுநர் ரவி, எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் டெல்லி பயணம்.! தனித்தனியாக அமித்ஷா உடன் சந்திப்பு.!

தமிழக ஆளுனர் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக இன்று டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளனர். அங்கு தனித்தனியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் சந்திப்பு நிகழ்த்த உள்ளனர்.
இன்று காலை ஆளுநர் ரவி 3 நாள் பயணமாக டெல்லி செல்ல உள்ளார். அதே போல், இன்று பிற்பகல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிச்சாமி டெல்லி செல்ல உள்ளார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை முடிந்த பிறகு நாளை மீண்டும் விமானம் மூலம் தமிழகம் வரவுள்ளார்.
இது குறித்து அதிமுக வட்டாரத்தில் பேசுகையில் அதிமுக – பாஜக கூட்டணியை முடிவு செய்து இருப்பது பாஜக தேசிய தலைமை தான் என கூறி அண்ணாமலை கருத்துகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டனர். தமிழக அரசியல் சூழல் இப்படி இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்திப்பது என்பது மிகவும் குறிப்பிடத்தக்க சந்திப்பாக பார்க்கப்படுகிறது.