பொறுப்பேற்றுக்கொண்டார் மத்திய கலால் வரி (ம) ஜிஎஸ்டி தலைமை ஆணையர்…

Published by
Kaliraj

இந்திய குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய வருவாய் சேவைகள் துறையின்  1987-ம் ஆண்டு அணியை சேர்ந்த ஜி.வி.கிருஷ்ணா ராவ், அவர்கள்  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் மத்திய கலால் வரி மற்றும் மத்திய ஜி.எஸ்.டி. தலைமை ஆணையராக  நேற்று பொறுப்பு ஏற்றார்.இவர் குறித்த சிறப்பு தொகுப்பு.

கல்வி:

  • இவர், ஆந்திர பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பு முடித்த பின்,
  • இவர் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. மற்றும் எல்.எல்.பி. படிப்புகளையும் படித்துள்ளார்.
  • இதுதவிர சைபர் சட்டம் மற்றும்
  • அறிவுசார் சொத்துரிமை படிப்பில் முதுகலை பட்டயப்படிப்பும்,
  • இதழியல் மற்றும்
  • ஜோதிடத்தில் முதுகலை படிப்பும் நிறைவு செய்திருக்கிறார்.

வகித்த பதவிகள்:

  • இவர், மைசூரில் கமிஷனர் மற்றும் முதன்மை கமிஷனராக இருந்தபோது ஜி.எஸ்.டி.யை கடந்த 2017-ம் ஆண்டு வெற்றிகரமாக அமல்படுத்துவதற்கான கருவியாக திகழ்ந்துள்ளார்.
  • கவுகாத்தியில் செயல்பட்டு வரும் 7 வடகிழக்கு மாநிலங்களின் சுங்கம் மற்றும் ஜி.எஸ்.டி.யின் தலைமை கமிஷனராக இருந்தார்.
  • 1998-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2005-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை மத்திய கலால் மற்றும் சுங்கத்துறையில் சென்னையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
  • அவருடைய இந்த பொறுப்பில், வரி செலுத்துபவர்களுக்கான சேவைகள், வருவாயை மேம்படுத்துதல் மற்றும் பணியாளர் நலன் உள்ளிட்ட விவகாரங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட உள்ளது.
  • மேற்கண்ட தகவல் மத்திய கலால் மற்றும் ஜி.எஸ்.டி. முதன்மை தலைமை கமிஷனர் அலுவலகத்தின் கூடுதல் கமிஷனர் பி.செந்தில்வேலவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

10 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

11 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

12 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

12 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

13 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

13 hours ago