தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தாலுக்கா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 969 சார்பு ஆய்வாளர்கள் பணிகளை நிரப்புவதற்காக வருகின்ற 11, 12 -ம் தேதிகளில் எழுத்துத் தேர்வு நடத்த தேதிகள் அறிவித்து இருந்தது.
இந்த இரண்டு தேதிகளில் காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கு 11-ம் தேதியும், பொது விண்ணப்பதாரர்களுக்கு 12-ம் தேதியும் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும் என இருந்தது.
சமீபத்தில் சார்பு ஆய்வாளர் பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.இந்நிலையில் எழுத்துத் தேர்வு தேதிகளில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.அதாவது காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கு 11-ம் தேதி நடைபெற இருந்த எழுத்துத் தேர்வு 13-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுத இருந்தவர்களுக்கு தேர்வு மையம் மதுரவாயல் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்து உள்ளது.
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…