தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தாலுக்கா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 969 சார்பு ஆய்வாளர்கள் பணிகளை நிரப்புவதற்காக வருகின்ற 11, 12 -ம் தேதிகளில் எழுத்துத் தேர்வு நடத்த தேதிகள் அறிவித்து இருந்தது.
இந்த இரண்டு தேதிகளில் காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கு 11-ம் தேதியும், பொது விண்ணப்பதாரர்களுக்கு 12-ம் தேதியும் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும் என இருந்தது.
சமீபத்தில் சார்பு ஆய்வாளர் பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.இந்நிலையில் எழுத்துத் தேர்வு தேதிகளில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.அதாவது காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கு 11-ம் தேதி நடைபெற இருந்த எழுத்துத் தேர்வு 13-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுத இருந்தவர்களுக்கு தேர்வு மையம் மதுரவாயல் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்து உள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…