தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்கள் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.
அதன்படி, நாளை வேட்புமனு தாக்கல் என்றும் வரும் 16ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் எனவும் தெரிவித்துள்ளார். வரும் 19ஆம் தேதி வேட்பாளர்களுக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். தேர்தல் அவசியமானால் 26ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும், 27ஆம் தேதி வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனிடையே, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தேர்தல், நடந்தது. இதில் புதிய தலைவராக, முன்னாள் எம்.பியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணை தலைவருமான அப்துல் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…