நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் கல்வித்துறையில் உலகின் முதன்மையான இடத்திற்கு தமிழகம் வரும் என சீமான் பரப்புரையில் உறுதியளித்தார்.
கோவையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும் என்றும் அந்த தேர்தலிலும் 50% பெண் வேட்பளர்கள் நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் பாஜக வாக்கு சதவீதம் மிக குறைவு என குறிப்பிட்ட சீமான், பாஜகவின் மெயின் டீம் திமுகதான் விமர்சனம் செய்துள்ளார். சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை கொண்டுவந்தது காங்கிரஸ் தான் என தெரிவித்த அவர், காங்கிரஸ் மற்றும் பாஜகவை தொடர்ந்து எதிர்ப்போம் என்று குறிப்பிட்டார்.
நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தரமான கல்வி அளிக்கப்படும் என்றும் தாய்மொழி தமிழில் தான் பாடங்கள் கற்பிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். கல்வித்துறையில் கொரியாவை மிஞ்சி உலகின் முதன்மையான இடத்திற்கு தமிழகத்தை கொண்டுவருவோம் என்றும் உறுதியளித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…