புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்க உள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார்.
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக பதவி வகித்து வந்த கிரண்பேடி நேற்று துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜனுக்கு புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் ஆக நியமனம் செய்யப்பட்டு, கூடுதல் வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நாளை காலை 9 மணிக்கு தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணைநிலை ஆளுநாராக பொறுப்பேற்கிறார். இதனால், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சற்று நேரத்திற்கு முன் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார்.
புதுச்சேரி வந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கானாவில் ஒன்றரை ஆண்டுகள் ஆளுநராக பணியாற்றியுள்ளேன். புதுச்சேரிக்கு ஆளுநராக வந்துள்ளேன் என இருமுறை அழுத்தி கூறினார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பணி ஏற்பது கூடுதல் மகிழ்ச்சி தருகிறது என அவர் தெரிவித்தார்.
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…