சென்னை:அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில்,தற்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் இல்லாமல் முதல் முறையாக அக்கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த செயற்குழு கூட்டத்தில்,இதனால்,புதிய அவைத்தலைவர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
அதேசமயம்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்,உட்கட்சி தேர்தல் ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,ஒருங்கிணைப்பாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில்,அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு பிறகு யாரும் தேர்வு செய்யப்படாத காரணத்தால் அப்பதவி காலியாக உள்ளதையடுத்து, அதிமுகவின் தற்காலிக தலைவராக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து,அவருக்கு ஓபிஎஸ்,ஈபிஎஸ் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.
கன்னியாகுமரியை சேர்ந்த தமிழ்மகன் உசேன் அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியதிலிருந்தே கட்சியில் இருந்து வருகிறார்.அகில உலக எம்ஜிஆர் மன்ற செயலாளராகவும் இவர் இருந்து வந்துள்ளார். மேலும், கட்சியில் வக்ஃபு வாரிய தலைவர் பொறுப்பையும் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…