காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்.! பெங்களூருவுக்கு சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Published by
மணிகண்டன்

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு சென்றடைந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். 

கடந்த மாதம் பீகார் மாநிலம் பாட்னாவில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் , ஆம் ஆத்மி என 15 எதிர்க்கட்சிகள் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசித்தனர். அந்த கூட்டத்தை அடுத்து இன்று மற்றும் நாளை பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆலோசனை கூட்டமானது காங்கிரஸ் கட்சி தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் இருக்கும் 24எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக சார்பில் பங்கேற்க திமுக தலைவரும் , தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு சென்ற அவர் தற்போது பெங்களூருவில் தரையிறங்கி உள்ளார்.

அங்கு அவருக்கு கர்நாடக அரசு சார்பில் வரவேற்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று மாலை கர்நாடக முதல்வர் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்க ஏற்பாடு செய்துள்ளார். கடந்த ஆலோசனை கூட்டத்தில் ராகுல்காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே மட்டும் கலந்துகொண்ட நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் சோனியா காந்தியும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

29 seconds ago

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…

18 minutes ago

14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு.!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…

27 minutes ago

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

52 minutes ago

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் துப்பாக்கிச்சூடு.., ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி.!

மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் – முதல்வர்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

2 hours ago