தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்க – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

Published by
Rebekal

30 வயதிற்குட்பட்ட தமிழகம் கல்லூரி மாணவர்களின் கல்வி கடனை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்து ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக அரசு, வாக்குறுதியை நிறைவேற்றதுடன், கல்லூரி தேர்வு கட்டணங்களை இரண்டு ,மூன்று மடங்கு உயர்த்தி உள்ளதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 147 இணைப்புக் கல்லூரிகளில் கட்டணங்கள் இரண்டு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகவும். இதனால் மாணவர்கள் போராட்டம் நடத்துவதாகவும் செய்திகள் வெளியாகிறது ஆனால் அரசு இதற்கு எவ்வித நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. எனவே பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பழைய கட்டணம் வசூலிக்கவும் மற்ற பல்கலைக்கழகங்களும் கட்டண உயர்வை அறிவிக்காமல் இருக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது.

எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாணவர்களின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு, பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் உட்பட அனைத்து கட்டண உயர்வையும் ரத்து செய்ய வேண்டும் எனவும், வருங்காலங்களில் பல்கலைக்கழகங்களில் கட்டண உயர்வு அறிவிப்பு இருக்கக் கூடாது எனவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துவதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Recent Posts

ராமாபுரம் விபத்து : L&T நிறுவனத்திற்கு 1 கோடி அபராதம் விதித்த மெட்ரோ நிர்வாகம்!

ராமாபுரம் விபத்து : L&T நிறுவனத்திற்கு 1 கோடி அபராதம் விதித்த மெட்ரோ நிர்வாகம்!

சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…

4 minutes ago

ஈரானில் இந்திய மாணவர்கள் 5 பேர் காயம்? 110 பேர் பாதுகாப்பாக டெல்லி வருகை!

தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…

31 minutes ago

15 நாட்களில் வாக்காளர் அடையாள அட்டை! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை…

46 minutes ago

ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு ஆள் திரட்டிய வழக்கு : 4 பேரை அதிரடியாக கைது செய்த NIA!

சென்னை : தேசிய புலனாய்வு முகமை (NIA) ஜூன் 18, 2025 அன்று, ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத அமைப்புக்கு ஆள்…

1 hour ago

இந்த 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : நேற்று முன் தினம் தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி,…

2 hours ago

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

11 hours ago