அருங்காட்சியகம் என்ற அறிவிப்பு தமிழர்களுக்கு பெருமை -அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

Published by
Venu

தூத்துக்குடி மாவட்டத்தில் தொல்லியல் சிறப்பு மிக்க தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில்,அருங்காட்சியகம் என்ற அறிவிப்பு தமிழர்களுக்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  ஆதிச்சநல்லூரில்  கி.மு 1600 க்கு முற்பட்ட நாகரிகத்தோடு தொடர்புடையது. தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஊர்களில் முதன்மையானதாக உள்ளது. எனவே நேற்று 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.அப்பொழுது அவரது உரையில்,தூத்துக்குடி மாவட்டத்தில் தொல்லியல் சிறப்பு மிக்க தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில்,பட்ஜெட்டின் போது ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் என்ற அறிவிப்பு தமிழர்களுக்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட்டில் அறிவித்த தொல்லியல் பல்கலைக்கழகத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.கீழடியில் அமையவுள்ள அருங்காட்சியகத்திற்கு இந்த வாரம் அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் பழனிசாமி. பட்ஜெட் தாக்கலின் போது சரஸ்வதி சிந்து என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதில் தவறில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

5 minutes ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

38 minutes ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

59 minutes ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

1 hour ago

போதைப்பொருள் விவகாரம்: ‘Code Word-ல்’ பேசியது அம்பலம்.., நடிகர் கிருஷ்ணா கைது.!

சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…

2 hours ago

”ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை” – மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…

2 hours ago