TASMAC [File Image]
TASMAC : தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் 3 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுக்க ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் புதுச்சேரி தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நாளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வழக்கமாக தேர்தல் நடைபெறும் நாளன்று மதுபான கடைகள் மூடப்படும். அதே போல இந்த முறையும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, தேர்தல் நாள் மற்றும் அதற்கு முந்தைய நாட்கள் ஏப்ரல் 17, 18 ஆகிய நாட்கள் சேர்த்து மொத்தம் 3 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் தமிழகத்தில் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், 7 கட்ட மக்களவை தேர்தல் முடிந்து, ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியிடப்படும் நாளன்றும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…