மூர்க்கமாக நடக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் தான் 2ம் தாயாக இருந்து திருத்த வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் சஞ்சய் என்பவர் தாவரவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதே பள்ளியை சேர்ந்த மாறி என்ற மாணவனிடம் செய்முறை வீட்டுப்பாடத்தை சமர்ப்பிக்கும்படி கூறியுள்ளார்.
இந்த நிலையில், அந்த மாணவன் ஆசிரியை முன்பதாக தரையில் பாய் போட்டு படுத்துளார். இதனை தட்டி கேட்டபோது அவரை தாக்க முயன்றுள்ளார். இந்த செயலை சக மாணவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்த நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இதனையடுத்து வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியன் மற்றும் ஆம்பூர் வட்டாட்சியர் பழனி பள்ளி தலைமையாசிரியர் முன்பு மாணவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின், மாணவன் தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறுகையில், ‘மூர்க்கமாக நடக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் தான் 2ம் தாயாக இருந்து திருத்த வேண்டும். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…