தென்காசி கட்டேறிப்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தென்மொழிக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் நடந்துள்ளது.திருமணம் ஆகிய 20 நாட்களில் முருகன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.
இதனிடையே கடந்த நவம்பரில் தனது தாய் வீட்டில் தென்மொழிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.ஆனால் கணவர் வீட்டாரோ இந்த குழந்தை எங்கள் மகனுக்கு பிறக்கவில்லை என்று கைக்குழந்தையுடன் கணவன் வீட்டிற்கு வந்த மருமகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து அவருடைய மாமியார் கடுமையாக நடந்து உள்ளார்.
கைக்குழந்தையுடன் கணவன் வீட்டிற்கு ஆசையோடு வந்த என்னை இப்படி அவமானம் படுத்துகிறார்கள் இந்தக் குழந்தை எனக்கும் என் கணவனுக்கு பிறந்தது தான் வேண்டுமானால் வெளிநாட்டிலுள்ள தனது கணவரை டி.என்.ஏ பரிசோதனை செய்ய அழைத்து வாருங்கள் அதுவரையிலும் வீட்டிற்குள் என்னை அனுமதியுங்கள் என்று கூறி கைக்குழந்தையுடன் கணவன் வீட்டின் முன்பு தென்மொழி தர்ணாவில் ஈடுபட்டார்.தென்காசி அருகே நடந்துள்ள இந்த சம்பவம் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே உள்ள புனிதமான உறவை கொச்சைப் படுத்துவதாக குடும்ப நல ஆர்வர்கள் நோக்குகின்றனர்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…