தைப்பூச திருவிழா.! அறுபடை வீடுகளில் குவிந்து வரும் முருக பக்தர்கள்.!

Published by
மணிகண்டன்

தமிழ் மாதங்களில் தை மாதத்தில் பவுர்ணமியுடன் பூசம் நட்சத்திரம் சேரும் நாளை தைப்பூசத் திருவிழாவாக தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். உலகில் முதலில் உயிர்கள் தோன்றிய நாளாக தைப்பூச நாள் கொண்டாடப்பட்டு வருகின்றன. தைப்பூசத்தன்றுதான் வள்ளியை பகவான் முருகன் மணம் புரிந்து கொண்டார் என்று கூறப்படுகிறது. அதனால் தான் தைப்பூசம் நாளன்று முருகன் கோயில்கள் திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.

தைப்பூசத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா?.. வாங்க அது என்னன்னு தெரிஞ்சுக்குவோம்.!

இன்றைய நாளில் உலகில் உள்ள அனைத்து முருகன் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் செய்து வெகுசிறப்பாக கொண்டாடப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் முருக பத்தர்கள் கூட்டம்  அதிகமாக உள்ளது. கடற்கரையில் அமைந்துள்ள திருச்செந்தூர் முருகன் கோயில் நடை அதிகாலை ஒரு மணிக்கே திறக்கப்பட்டு உதய மார்த்தாண்ட தரிசனம் நடைபெற்றது.

நள்ளிரவு முதலே பல்லாயிரகணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதே போல மற்ற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருத்தணி, பழனி, பழமுதிர்ச்சோலை, சுவாமி மலை ஆகிய கோயில்களிலும்பகதர்கள் கூட்டம் அதிகமாக  இருக்கிறது.  காவடி எடுப்பது, அலகு குத்துக்கொள்வது என பல்வேறு வகைகளில் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.

முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமல்லாது  சென்னை வடபழனி முதல் மலேசியா முருகன் கோயில் வரையில் இன்று தைப்பூச திருவிழா வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

13 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

14 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

14 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

15 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

15 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

17 hours ago