நீதியின் பக்கம் நின்ற நீதிமன்றத்துக்கு நன்றி – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

Published by
பாலா கலியமூர்த்தி

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யபட்டுள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் விடுதியில் தங்கி தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜனவரி 9-ஆம் தேதி அந்த மாணவி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில், 19ஆம் தேதி உயிரிழந்தார். மாணவி தற்கொலை விவகாரத்தில் பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம் மத மாற்ற செய்ய அழுத்தம்தான் காரணம் என்றும் குற்றசாட்டு எழுந்த வருகிறது.

ஆனால், மதமாற்றம் தொடர்பாக பரப்புரை ஏதும் இல்லை என பள்ளியில் விசாரணை மேற்கொண்ட பிறகு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இதனிடையே, மதம் மாற்றம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியதால் தான் மாணவி தற்கொலை செய்துகொண்டதாகவும், இந்த வாழ்க்கை சிபிசிஐடிக்கு மாற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் தமிழக பாஜக தெரிவித்து வந்தது. மேலும் மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு உண்ணாவிரத போராட்டத்தையும் மேற்கொண்டியிருந்தது.

தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி இல்லத்திற்கு சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான பாஜகவினர், நேற்று மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, மதம் மாற சொல்லி கட்டாயப்படுத்தியதால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

இந்த வழக்கை அவரச வழக்காக எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம் மதுரை கிளை, மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை பிறப்பித்தார். மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில்,  சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யபட்டுள்ளது. நீதியின் பக்கம் நின்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு நன்றி என மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவிட்ட பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

2 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

3 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

3 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

4 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

4 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

6 hours ago