கொரோனா வைரஸ்-ஐ முற்றிலும் இல்லாமல் செய்தது அதிமுக தலைமையிலான அரசு- எடப்பாடி பழனிச்சாமி!

Published by
பால முருகன்

மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக “பொன்விழா எழுச்சி” மாநாடு பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ” அதிமுக அரசு மக்கள், விவசாயிகளுக்கு தேவையான நிவாரணங்களை உடனடியாக  வழங்கியது.

கொரோனா வைரஸ் பரவி வந்த காலத்தில் முற்றிலும் அந்த வைரஸ் இல்லாமல் செய்தது நம்மளுடைய அதிமுக தலைமையிலான அரசு தான். அதிமுக அரசு கொரோனா பேரிடரை மிக சிறப்பாக கையாண்டு மக்கள் நலனை காத்தது.   அதைப்போல, கஜா புயலின்போது புயலைவிட வேகமாக செயல்பட்டு பாதிப்புகளை நாங்கள் தான் சீரமைத்தோம்.

புயலால் பாதித்த விவசாயிகளுக்கு ரூ.2,247கோடி நிவாரணத் தொகை வழங்கினோம். இப்படி பல நல்ல உதவிகளை மக்களின் நலனை கருது எங்களுடைய, நம்மளுடைய அதிமுக கட்சி செய்து கொடுத்துள்ளது. நான் முதல்வராக இருந்தபோது வறட்சி, புயல் உள்ளிட்ட இடர்களை எல்லாம் சமாளித்து சிறப்பான ஆட்சியை கொடுத்தேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ” மதுரை மண் ராசியான மண், இங்கே தொடங்கியது எல்லாம் வெற்றிதான். முதல் மாநாட்டை இங்கே நடத்துவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” எனவும் தெரிவித்தார்.

Published by
பால முருகன்

Recent Posts

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

39 minutes ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

2 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

2 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

3 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

3 hours ago

அங்கன்வாடி மையங்கள் மூடலா? விளக்கம் கொடுத்த அமைச்சர் கீதா ஜீவன்!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…

4 hours ago