வருகின்ற கல்வியாண்டு முதல் பொறியியல் (BE) பாடங்களை தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் படிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
பொதுவாக கல்லூரிகளில் பொறியியல் (BE) பாடங்கள் அனைத்தும் ஆங்கில மொழியில் மட்டுமே நடத்தப்படுகின்றன.இதனால்,பள்ளிகளில் தாய் மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் படிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.
இதன் காரணமாகவே,கிராமப்புற மாணவர்கள் பொறியியல் (BE) படிப்பில் சேர ஆர்வம் காட்டுவதில்லை.இந்நிலையில்,அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(AICTE),ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது,வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் (BE) பாடங்களை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 7 மொழிகளில் படிக்கலாம் என்று அனுமதி அளித்துள்ளது. மேலும்,பொறியியல் பாடங்களை அந்தந்த பிராந்திய மொழிகளில் மொழி மாற்றவும் அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் திட்டமிட்டுள்ளது.
இதன் காரணமாக,ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை இடம் பெற்றிருந்த பொறியியல் பாடங்கள் தற்போது தாய் மொழியிலும் இடம்பெறும். அதுமட்டுமல்லாமல், பொறியியல் (BE) பாடங்களை 11 இந்திய மொழிகளில் கொண்டு வரவும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…
சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…
புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று…
பெங்களூர் : இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி அறிவித்துள்ளது.…
மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த…
ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது.…