ADMK Ex MLA T Nagar Sathya
2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் இருந்தபோது தி.நகர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாகபி பொறுப்பில் இருந்தவர் தி.நகர் சத்யா எனப்படும் சத்ய நாராயணன். இவர் 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக சார்பாக போட்டியிட்டார்.
சட்டமன்ற தேர்தலின் போது தனது சொத்து கணக்காக 2 கோடியே 78 லட்சம் ரூபாய் இருப்பதாக தேர்தல் பிரமாண பத்திரிக்கையில் குறிப்பிட்டு இருந்துள்ளார். இதனை அடுத்து பத்திரிக்கையாளர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தி.நகர் சத்யாவின் சொத்து மதிப்பை வெளியிட கேட்டுள்ளார். அப்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவரது சொத்து மதிப்பானது 13 கோடியான தகவல் வெளியானதாக தெரிகிறது.
இதனை அடுத்து சட்டத்திற்கு புறம்பாக தனது சொத்து மதிப்பை மறைத்து தேர்தல் பிரமாண பத்திரத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா தெரிவித்துள்ளார் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை செய்து இரண்டு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை அடுத்து இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறையினர் தி.நகர் சத்யாவுக்கு சொந்தமான இல்லம், அவருக்கு சொந்தமான மற்ற இடங்கள் என தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…
டெல்லி : டெல்லியில் நாளை (மே 24) நடைபெறவுள்ள 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து…
சென்னை : நடிகர் சிம்பு தற்போது தக் லைஃப் படத்தின் ப்ரமோஷன் பணியில் பிசியாக உள்ள நிலையில், அவரது 50வது…
ஜெய்ப்பூர் : ஆபரேஷன் சிந்தூர்க்கு ஆதரவு அளிக்கும் விதமாக, ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பகம் ஒன்று மைசூர் பாக், இனிப்புகளின் பெயர்களை…
சென்னை : நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து செய்தி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
டெல்லி : கடந்த 21-ம் தேதி டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு 220 பேருடன் புறப்பட்ட 6E 2142 இண்டிகோ விமானம்…