Tamilnadu BJP Leader Annamalai
அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தொகுதி வாரியாக தேர்தல் பொறுப்பாளர்களை நியமிக்க ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் பொறுப்பாளர்களை தொகுதி வாரியாக நியமிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். தேர்வு செய்யப்படும் பொறுப்பாளர்கள் எந்த குற்ற பின்னணியும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். முழுநேர கட்சி பணியாற்றுபவர்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, 10 நாட்களுக்குள் தொகுதி வாரியாக சிறப்பாக பணிபுரியும் வேட்பாளர்களை அடையாளம் கண்டு, தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பொறுப்பாளர்களை நியமிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தொகுதி வாரியாக சிறப்பாக செயல்படும் பாஜக நிர்வாகிகள் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டு தேசிய தலைமையிடம் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்ட பின் அண்ணாமலை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது நடிப்பில்…
சென்னை : பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி,…
ஹவாய் : ஜூலை 20 அன்று, வடக்கு பசிபிக் கடல் பகுதியில் ரிக்டர் அளவில் 7.4 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம்…
அமெரிக்கா : தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம் செஸ் வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் செஸ்…
டெல்லி : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்க்கவோ அல்லது தயாரிக்கவோ ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது…
விழுப்புரம் : மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக…