அம்மையார் மம்தா மீதான தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் வெட்கித் தலைகுனியச் செய்கிறது – சீமான்

Published by
லீனா

மம்தா எனர்ஜி மீதான தாக்குதலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்வீட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்க முதல்வர் மம்தா, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவித்து, வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் நந்திகிராம் பகுதியில் தேர்தல் பரப்புரைக்கு பின் காரை நோக்கி செல்லும் போது 4-5 பேர் அவரை தள்ளி விட்டதாகவும், இதனால் அவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக புகாரளித்துள்ளார். இது, அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து மம்தா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இடுப்பு மற்றும் கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு எக்ஸ்ட்ரெ எடுத்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மம்தாவுக்கு சிகிச்சையளிக்க 5 மருத்துவர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘மேற்கு வங்காளத்தில் தேர்தல் பரப்புரைக்காக நந்திகிராம் தொகுதிக்குச் சென்ற அம்மையார் மம்தா பானர்ஜி அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். ஒரு மாநிலத்தின் முதல்வர் மீதே துணிந்து வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் கொடுங்கோலர்களின் இப்போக்கு, நாடு எத்தகைய அசாதாரண நிலையில் இருக்கிறது என்பதைத் தெளிவாக வெளிக்காட்டுகிறது.

சனநாயகத்திற்கு சவால் விடக்கூடிய வகையில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் வெட்கித் தலைகுனியச் செய்கிறது. அம்மையார் மம்தா மீதான இத்தாக்குதல் வன்மையான கண்டனத்திற்குரியது என பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

19 minutes ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

1 hour ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

2 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

2 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

2 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

3 hours ago