தமிழகத்தில் இன்னும் பாஜக காலூன்றவில்லை என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி எனவும் பாஜகவை அனுசரித்து செல்லும் கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என கூறினார்.
மத்தியில் ஆட்சி இருப்பதால் பாஜக தலைமையில் தான் கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்கும் என தெரிவித்தார். அதிமுக VS திமுக என்று இருந்த நிலையில் தற்போது பாஜக VS திமுக என மாறிவிட்டது என்று வி.பி.துரைசாமி கூறினார்.இவரது கருத்து அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு திமுகவினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், திமுகவிற்கு ,பாஜகவிற்கும் போட்டி என்றால் கொள்கை அளவிலே திமுக பாஜகவிற்கு நேரெதிரான கொள்கை என்பதில் மாற்று கருத்து இல்லை.அவர்கள் மதவாதம் பேசுகிறார்கள்.நாங்கள் மத நல்லிணக்கம் பேசுகின்றோம்.எனவே கொள்கை ரீதியாக பாஜகவிற்கும், எங்களுக்கும் போட்டி. ஆனால் தேர்தல் கூட்டணி என்று வரும்போது அவர்கள் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கின்றனர். அதிமுக அவர்களுக்கு மக்களவை தேர்தலில் 5 இடங்களை கொடுத்தது.அந்த இடத்தில் தான் அவர்களும் இருக்கிறார்கள். பாஜகவை பொறுத்தவரை அவர்கள் இன்னும் தமிழகத்தில் காலூன்றவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…