திருமணம் முடிந்த கையுடன் மெரினாவில் பனை மரம் நட்ட மணமக்கள்.!

Published by
Ragi

திருமணம் முடிந்த கையுடன் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் சமூக சேவைகளை செய்து வரும் மணி மற்றும் அனிதா தம்பதியினர் பனை மரம் நட்டுள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக சமூக சேவைகளில் தொடர்ந்து செயல்பட்டு வருபவர்கள் லயோலா மணி மற்றும் அனிதா. இவர்கள் ஊரடங்கு காலத்தில் கூட பல வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி பல உதவிகளை செய்தனர் . கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள வடபழனியில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த கையுடன் சென்னையில் உள்ள மெரினா கடற்கரை சென்று அப்பகுதியில் ஏராளமான பனை விதைகளை பல இடங்களில் நட்டு வைத்து சமூக பணிகளில் ஈடுபட்டனர். இதுகுறித்து மணமக்கள் கூறிய போது, தமிழர்களுக்கான மரமும், பல பலன்களை தரக் கூடிய பனை மரம் தற்போது அழிந்து வருவதாகவும், அதனை மீட்டெடுப்பதற்கான தங்களது ஒரு சிறிய முயற்சி என்றும் கூறியுள்ளனர். மரத்தை நடுவது மட்டுமில்லாமல் அடிக்கடி கடற்கரைக்கு வந்து மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கவும் இருவரும் முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளனர். ஏற்கனவே பல லட்சக்கணக்கான பனை மரங்களை ‘காக்கை’ என்ற அமைப்பு நட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Published by
Ragi

Recent Posts

ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…

3 hours ago

குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…

4 hours ago

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…

5 hours ago

பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

5 hours ago

இன்று இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..அலர்ட் செய்த வானிலை மையம்!

தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

6 hours ago

டெல்லியை பந்தாடி த்ரில் வெற்றி…முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி பெற்ற குஜராத்!

டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…

6 hours ago