விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே, சுந்தரேசபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் வரதராஜன் – சவுந்தர்யா தம்பதியினர். கடந்த 15 நாட்களுக்கு முன்பதாக இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. வரதராஜன் பெண் குழந்தையை விரும்பாத காரணத்தால், மருத்துவமனைக்கு சென்று குழந்தையை பார்க்கவில்லை.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சவுந்தர்யா, 3-வது நாளே தனது கணவர் குழந்தையை கொலை செய்ய எடுத்து சென்றதை பார்த்து, பயத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து, மாமியார் வீட்டிற்கு சென்று தான் திருந்தி விட்டதாக கூறி மனைவியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து, நேற்று மாலை குழந்தையை காணவில்லை என தேடிய போது, குழந்தை தென்பெண்ணை ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, வரதராஜனை போலீசார் விசாரித்த போது. குழந்தையை கொலை செய்து புதைத்ததை அவர் ஒப்பு கொண்டுள்ளார். இதனையடுத்து, போலீசார் வரதராஜனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பெண் குழந்தை என்பதற்காக பிறந்து 15 நாளே ஆன குழந்தையை இவ்வாறு கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…