பெரம்பலூர் அருகே சுப்பிரமணி என்பவரது வீட்டின் மேற்கூரையை துளைத்துக் கொண்டு துப்பாக்கி குண்டு பயந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே மருதடிஈச்சங்காடு கிராமத்திற்கு அருகே துப்பாக்கி சூடு பயிற்சி மையம் உள்ளது. அங்கு அவ்வ்வப்போது துப்பாக்கிசூடு பயிற்சி நடைபெற்று வரும் நிலையில், நேற்று அந்த மையத்தில் பயிற்சி நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று சுப்பிரமணி என்பவரது வீட்டில் மேற்கூரையை துளைத்துக் கொண்டு துப்பாக்கி குண்டு ஒன்று வீட்டிற்குள் விழுந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், துப்பாக்கிக்குண்டை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குண்டு பாய்ந்த சத்தம் கேட்ட போது, அந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியில் இருந்ததால், நல்வாய்ப்பாக எந்த சேதமும் ஏற்படவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக, புதுக்கோட்டையில், துப்பாக்கிசூடு மையத்தில் இருந்து குண்டு பாய்ந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…