[Image Source :Yoga Balaji/Wikipedia]
ஆன்லைன் சூதாட்ட தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை இன்று நடக்கிறது.
அமலுக்கு வந்துள்ள ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து, 69 சூதாட்ட விளையாட்டு நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ள அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், அவர்கள் முறையீடு செய்த மனு உரிய காரணத்தை கொண்டிருந்தால் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும், இல்லாவிட்டால் சாதாரண வழக்காக வழக்கமான பட்டியலில் இடம் பெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தொடரப்பட்ட வழக்கை காணொளி வாயிலாக நீதிபதிகள் இன்று விசாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்:
ஆன்லைன் சூதாட்டத்தால் தங்கள் பணத்தை இழந்து பலர் பெரும் கடனாளியாக மாறி மனஉளைச்சலில் பல்வேறு நபர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர் . இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை நிறைவேற்றியது.
2 முறை நிறைவேற்றி, இரண்டவது முறை தான் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு இம்மாதம் 10ஆம் தேதி தமிழக ஆளுநர் ரவி கையெழுத்திட்டார். ஆளுநர் கையெழுத்திட்ட உடன் உடனடியாக தமிழக அரசிதழில் இந்த சட்டம் வெளியிடப்பட்டு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…