கோடநாடு கொலை வழக்கு.! சசிகலா மற்றும் எடப்பாடி ஜோதிடரை விசாரிக்க சிபிசிஐடி முடிவு.!

Published by
மணிகண்டன்

கோடாநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக சசிகலா மற்றும் எடப்பாடி ஜோதிடரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த கொலை கொள்ளை சம்பந்தமாக தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜ் என்பவர் ஏப்ரல் 24ஆம் தேதி அவரது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து விசாரணையானது மேலும் தீவிரமடைந்தது.

இந்த கோடநாடு கொலை கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். தற்போது கனகராஜ் உயிரிழப்பதற்கு முன்னர் காலையில் குடும்பத்துடன் எடப்பாடி சேர்ந்த ஒரு ஜோதிடரை சந்தித்ததாகவும், அவர், கனகராஜூக்கு ஏதோ மிகப்பெரிய கண்டம் இருப்பதாக கூறியதாகவும் கனகராஜின் மனைவி ஏற்கனவே காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்து இருந்தார்.

இதனை அடிப்படையாக கொண்டு தற்போது ஜோதிடரை எடப்பாடியை சேர்ந்த ஜோதிடரை விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு உள்ளனர் என்றும்,  மேலும், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலாவிடமும் தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விசாரணைக்காக மே முதல் வாரத்தில் சம்மன் அனுப்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“உடனே முதல்வர் ஆக முடியாது”… விஜய்க்கு குறித்து அன்பில் மகேஷ் கருத்து!

“உடனே முதல்வர் ஆக முடியாது”… விஜய்க்கு குறித்து அன்பில் மகேஷ் கருத்து!

சென்னை : த.வெ.க தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் அவர் திமுக குறித்து பேசிவருவது குறித்தும் திமுகவை சேர்ந்த அமைச்சர்களிடம்…

31 minutes ago

“10 நிமிஷம் லேட் அதுனால தப்பிச்சேன்”….விபத்தில் தப்பிய பெண் பேட்டி!

அகமதாபாத் : அகமதாபாத் : நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா…

1 hour ago

“விஜய் மாமன் சார் எங்களுக்கு…” வேல்முருகனுக்கு பதிலடி கொடுத்த பெண்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள்…

2 hours ago

WTC : தென் ஆப்பிரிக்காவை அதிரவிட்ட பேட் கம்மின்ஸ்! 300 விக்கெட் எடுத்து அசத்தல் சாதனை!

லண்டன் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றி…

2 hours ago

“எப்படி பிழைத்தேன் என நம்ப முடியவில்லை”…விமான விபத்தில் தப்பித்த நபர் எமோஷனல்!

அகமதாபாத் : நேற்று இந்தியாவையே மிகவும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்ட…

3 hours ago

விமான விபத்தில் விஜய் ரூபானி பலி! அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறிய சோகம்!

அகமதாபாத் : நேற்று இந்தியாவையே மிகவும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்ட ஏர்…

3 hours ago