“விஜய் மாமன் சார் எங்களுக்கு…” வேல்முருகனுக்கு பதிலடி கொடுத்த பெண்.!
வேல்முருகனின் சர்ச்சை பேச்சுக்கு த.வெ.க. கல்வி விருது விழாவில் பெண் ஒருவர் பேசி பதிலடி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவை மூன்று கட்டங்களாக நடத்தி வருகிறார். இந்த ஆண்டு முதல் கட்ட விழா மாமல்லபுரத்தில் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட விழாவானது தற்போது மீண்டும் மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது.
இந்த விழாவில், கலந்து கொண்ட பெண் ஒருவர் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு மேடையில் பதிலடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் இந்த முயற்சி, மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டப்பட்டாலும், வேல்முருகனின் கருத்து சர்ச்சையை கிளப்பிருந்தது.
வேல்முருகன், விஜய்யின் கல்வி விருது விழாவை விமர்சித்து, மாணவிகள் விஜய்யை “அண்ணா” என்று அழைப்பதையும், அவருடன் நெருக்கமாக இருப்பதையும் தவறாக சித்தரித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது த.வெ.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, மூன்றாம் கட்ட விருது விழாவில் பேசிய ஒரு மாணவி, “விஜய் சார் அரவணைப்பதை அசிங்கப்படுத்துவதா? அவர் எங்களுக்கு தாய் மாமன் சார்,” என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசி, வேல்முருகனுக்கு பதிலடி கொடுத்தார்.
விழாவில் பேசிய அந்த பெண் ” ஒரு தாய்மார்களாக பார்க்கும்போது எங்களுக்கு தப்பாக ஒன்றும் தோணவில்லை..எங்களுடைய வீட்டில் எங்களுடைய அப்பா ஒரு குழந்தையை அன்போடு கட்டியணைத்து முத்தம் கொடுத்தால் எப்படி இருக்குமோ…அதைப்போல தான் இருக்கிறது. விஜய் சார் எங்களுடைய குழந்தைகளுக்கு தாய் மாமன் போல் இருக்கிறது. அப்படி தான் நாங்கள் விஜய் சாரை பார்க்கிறோம். எங்களுக்கு எந்த கல்லம் கபடம் இல்லை” எனவும் தெரிவித்தார்.
Now it’s Parents turn ! 😂🔥 pic.twitter.com/oXqnv6ghlS
— TVK Vijay Trends (@TVKVijayTrends) June 13, 2025