மத்திய பட்ஜெட் தாக்கலில் கவர்ச்சி திட்டங்களை மட்டுமே மத்திய பாஜக அரசு அறிவித்திருப்பதாகவும், வேலைவாய்ப்பு குறித்து எந்த திட்டமும் அறிவிக்கவில்லை என்றும் திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 2021-22-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, ஏற்கனவே நிதிநிலையில் மிகப்பெரிய பின்னடைவில் இருக்கக்கூடிய இந்தியா, பொருளாதார ஆய்வறிக்கையில் ஜிடிபி மேலும் குறையும் என்று தெரிவித்திருக்கிறார்கள். வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலையில், அதை பெருக்குவதற்கான எந்த திட்டமும் இடம்பெறவில்லை. ஏதோ கவர்ச்சியாக சின்ன குழந்தைகளுக்கு சொல்வது மாதிரி அறிவித்திருக்கிறார்கள்.
இன்று தாக்கல் செய்யப்பட்டதில் நிறைய திட்டங்களுக்கு லட்சம், கோடி கணக்கில் நிதி அறிவித்து இருக்கிறார்களே தவிர, அதற்கான வருவாயை குறித்து எதையும் சொல்லவில்லை. விவசாயிகளுடன் வருமானத்தை இரட்டிப்பு செய்யப்படும் என்று கூறுகிறார்கள். தற்போதுள்ள 150 விழுக்காடுகளுக்கே வழியில்லை, இதில் 200 விழுக்காடுகள் எப்படி சாத்தியமாகும். பட்ஜெட் கூட்டத்தொடரில் நாங்கள் எதிர்பார்க்கப்பட்ட ஏதும் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…