தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் அவர்களிடம், தமிழகத்திற்கு நாளொன்றுக்கு 20000 ரெம்டேசிவிர் மருந்து குப்பிகளை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், தற்போது 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதிகமானோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு ரெம்டேசிவிர் மருந்தை, தேவையான அளவிற்கு கொள்முதல் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த மருந்து தற்போது அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளிலும், 6 பெருநகரங்களிலும் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக, தமிழ்நாட்டிற்கு இதுவரை 2 லட்சத்து 5 ஆயிரம் ரெம்டேசிவிர் மருந்து குப்பிகள், அதாவது நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் குப்பிகள் என்ற குறைந்த அளவிலேயே ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ் நாட்டின் தேவைக்கு இது போதுமானதாக இல்லை. நாளொன்றுக்கு 20,000 ரெம்டேசிவிர் மருந்து குப்பிகளை வழங்குமாறும், இவ்வாறு செய்தால் மட்டுமே தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் இந்த கோரிக்கை குறித்து பரிசீலித்து ஆவணம் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…
சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…
டெல்லி : 'Son of Sardaar', 'Jai Ho' 2 என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட்…
கேரளா : கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)…
சென்னை : அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது .கோவை,…
ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றது. இந்த…