மக்களவை வெற்றியை ருசித்த திமுக.. கோவையில் முதலமைச்சர் – களைகட்டும் முப்பெரும் விழா.!

Published by
கெளதம்

கோவை : திமுகவின் முப்பெரும் விழா இன்று கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இன்று மாலை 5 மணி அளவில் நடைபெறவிருக்கும் திமுகவின் முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில், கோவை வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினுக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, தேர்தலில் வெற்றியை தேடி தந்த மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழாவாக திமுக சார்பில் கோலாகலமாக நடைபெறுகிறது.

முப்பெரும் விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள் என அனைவரும் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கான இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் முத்துச்சாமி அங்கே இருந்து அனைத்தையும் கவனித்து வருகிறார். மேலும் இந்த விழாவில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்னால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நடந்து முடிந்துள்ள 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்,  இந்தியாக் கூட்டணிக்கு 40க்கு 40 எனும் மகத்தான வெற்றி மூலம் ஜனநாயகத்தை பாதுகாக்க துணைநின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றி போல, 2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில், திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் இடம்தான் இந்த கோவை முப்பெரும் விழா என்று முன்னதாக திமுக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

9 minutes ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

1 hour ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

1 hour ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

2 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

2 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

3 hours ago