மக்களவை வெற்றியை ருசித்த திமுக.. கோவையில் முதலமைச்சர் – களைகட்டும் முப்பெரும் விழா.!

Published by
கெளதம்

கோவை : திமுகவின் முப்பெரும் விழா இன்று கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இன்று மாலை 5 மணி அளவில் நடைபெறவிருக்கும் திமுகவின் முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில், கோவை வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினுக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, தேர்தலில் வெற்றியை தேடி தந்த மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழாவாக திமுக சார்பில் கோலாகலமாக நடைபெறுகிறது.

முப்பெரும் விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள் என அனைவரும் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கான இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் முத்துச்சாமி அங்கே இருந்து அனைத்தையும் கவனித்து வருகிறார். மேலும் இந்த விழாவில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்னால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நடந்து முடிந்துள்ள 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்,  இந்தியாக் கூட்டணிக்கு 40க்கு 40 எனும் மகத்தான வெற்றி மூலம் ஜனநாயகத்தை பாதுகாக்க துணைநின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றி போல, 2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில், திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் இடம்தான் இந்த கோவை முப்பெரும் விழா என்று முன்னதாக திமுக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

27 minutes ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

49 minutes ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

59 minutes ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

2 hours ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

2 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

3 hours ago