Water Resources Minister Duraimurugan [Image Source : dtnext/File Image]
அமைச்சரவையை மாற்றும் உரிமை முதலமைச்சருக்கு இருக்கிறது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் மாற்றம் செய்வது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன், நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இதன்பிறகு பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன் அமைச்சரவையில் என்ன மாற்றம் கொண்டுவரவேண்டும் என்ற அதிகாரம் முதலமைச்சருக்கு உள்ளது என்று கூறினார்.
மேலும் அமைச்சரவை மாற்றம் நடைபெறுவது என்பது உங்களுக்கு தெரிந்த அளவில் தான் எனக்கும் தெரியும், அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரும் உரிமை முதல்வருக்கு இருக்கிறது, அதனை யாரும் கேட்கமுடியாது என்று கூறினார்.
அதன்பிறகு ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தமிழக அமைச்சரவையில் இருந்து நாசர் விடுவிக்கப்படுவதாகவும், புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் வெளியானது, இந்த நிலையில் நாளை ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர் பதவியேற்பு விழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…