சந்தானம் ஸ்டைலில் ஒரே வீட்டை பலருக்கு குத்தகைக்கு விட்டு பண மோசடி செய்த தம்பதி.!

Published by
Ragi

ஒரே வீட்டை பலரிடம் குத்தகைக்கு விட்டு பண மோசடி செய்த தம்பதி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையை அப்துல்காதர் குத்தகைக்கு வீடு தேடி வந்துள்ளார். அப்போது ஆன்லைனில் ரவி-அமுதா தம்பதியினர் தங்களது வீட்டை லீசுக்கு விடுவதாக கூறிய விளம்பரத்தை கண்டு செல்போனில் தொடர்பு கொண்ட அப்துல்காதர் வீட்டை பிடித்து கொண்டதால் குத்தகைக்கு 15 லட்சம் ரூபாய்க்கு பேசி முடித்துள்ளார். அதனையடுத்து ரூ. 8 லட்சத்தை முதல் தவணையாகவும், ரூ. 7லட்சம் ரூபாயை இரண்டாம் தவணையாகவும் அந்த தம்பதியரிடம் ஜனவரி மாதத்தில் கொடுத்து ஒப்பந்தம் செய்துளளனர்.

ஆனால் அதனையடுத்து பல மாதங்கள் கழிந்த பின்னரும் வீட்டை ஒப்படைக்காமல் சாக்கு போக்கு சொல்லி கொண்டிருந்த தம்பதியரிடம் குத்தகையை ரத்து செய்து விட்டு பணத்தை திருப்பி தரும்படி அப்துல்காதர் கேட்டுள்ளார். அதனையடுத்து அப்துல்காதரை மிரட்ட தொடங்கிய ரவி-அமுதாவின் மீது வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதனையடுத்து நடந்த விசாரணையில் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு தியாகராயநகர் பகுதியில் தலைமறைவாகி இருந்த ரவி-அமுதாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ஒரே வீட்டை பலரிடம் குத்தகைக்கு விடுவதாக கூறி 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்வது தெரியவந்துள்ளது. மேலும் வீட்டை கேட்டு வருபவர்களிடம் சாக்கு போக்கு சொல்லி மிரட்டியும் வந்துள்ளனர். தற்போது இவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சேகரித்து வருவதோடு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Published by
Ragi

Recent Posts

கட்சிப் பொறுப்பில் இருந்து பாமக எம்.எல்.ஏ நீக்கம் – பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு.!

கட்சிப் பொறுப்பில் இருந்து பாமக எம்.எல்.ஏ நீக்கம் – பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு.!

சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…

17 minutes ago

போதைப்பொருள் விவகாரம் – ஸ்ரீகாந்திடம் போலீசார் தீவிர விசாரணை.!

சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…

37 minutes ago

”அண்ணா குறித்து விமர்சனம்.. பாஜகவிடம் அடகுவைக்கப்பட்ட அதிமுக” – சேகர்பாபு கடும் விமர்சனம்.!

சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…

40 minutes ago

“பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? சவால் விடுத்த சேகர் பாபு.!

சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…

2 hours ago

ஹார்மூஸ் நீரிணை மூட ஈரான் முடிவு.., உயரும் பெட்ரோல் – டீசல்.? இந்தியாவுக்கு பாதிப்பா.?

ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…

3 hours ago

ஜனநாயகன் கடைசி படமா? “விஜய் கூறியது இதுதான்” – மமிதா பைஜு சொன்னது என்ன.?

அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…

4 hours ago