தமிழ்நாடு

விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலருக்கு முன் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்..!

Published by
லீனா

கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் அவர்கள் கலந்து கொண்டார். அப்போது தங்கபாண்டியனிடம் விவசாயி ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் விவசாயியை காலால் எட்டி உதைத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், தலைமறைவாக இருந்த தங்கபாண்டியனை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் அவர் செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து, ஊராட்சி செயலர் தங்கபாண்டியனை இடைநீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உள்ளது.

விவசாயி அம்மையப்பன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊராட்சி செயலராருக்கு முன்ஜாமின் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், நீதிபதி தாக்கப்பட்டவருக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை; எனவே முன்ஜாமின் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

2 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

2 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

3 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

4 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

5 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

5 hours ago