[File Image]
நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரி நாளை தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
திமுக இளைஞர் அணியினர், திமுக மருத்துவர் அணியினர், திமுக மாணவர் அணியினர் ஆகிய அணியினர் மட்டும் இந்த போராட்டத்தினை நடத்த உள்ளனர் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த உண்ணாவிரத போராட்டமானது மதுரையில் மட்டும் நாளை நடைபெறாது என்றும், மதுரையில் வரும் 23ஆம் தேதி திமுக அணியினர் சார்பில் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் நாளை, மதுரையில் அதிமுக கட்சி சார்பில் பிரமாண்ட மாநாடு நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு ஊர்களில் இருந்து அதிமுக தொண்டர்கள் மதுரைக்கு வந்துகொண்டு இருக்கின்றனர். இந்த சமயம் திமுகவும் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் அது தேவையில்லாத சட்ட ஒழுங்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…