கள்ளக்காதலனுடன் அறையில் இருந்த தாயை பூட்டி வைத்த மகள் !

Published by
murugan

நெல்லை மேலப்பாளையம் பகுதியை சார்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நெல்லை டவுனில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறார். இப்பெண்ணின் கணவருக்கு 68 வயதாகிறது.

அவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில்  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த 29 வயது வாலிபர் இவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அந்த வாலிபர் யார் என்றால் இப்பெண்ணின் தம்பியின்  நண்பன்.

Image result for கள்ளக்காதலன்

 

இருவருக்கும்  கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.  இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில்  சந்தித்தனர். இந்த பெண்ணுக்கு 15 வயதில் மகன் ஒருவர் உள்ளார். கடந்த 4-ம் தேதி மாலை அப்பெண்ணும் , அந்த வாலிபனும் வீட்டில் உள்ள  ஒரு அறையில் கதவை பூட்டிக் கொண்டு உள்ளே இருந்தனர்.

இதை பார்த்த அந்த பெண்ணின் மகள் அறையை வெளி  பக்கமாக பூட்டி விட்டு பின்னர்  உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த உறவினர்கள் கதவை திறந்து அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அந்த வாலிபரை  மேலப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் காவல் நிலையத்திற்கு வந்த அப்பெண்  நான் கள்ளக்காதலனுடன் தான் வாழப்போவதாகவும் , அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் கூறினார். பின்னர் அவரிடம் போலீசார்  நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது .

அதில் அப்பெண்ணின் தாயுடன் தனது கணவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும் அதனால் தான் தன்னை அவருக்கு  திருமணம் செய்து கொடுத்ததாகயும் அப்பெண் கூறினார் மேலும் தன் கணவருடன் வாழ விருப்பமில்லை எனவும், கள்ளக்காதலுடன் பத்து வருடங்களாக வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.

 

அந்த வாலிபர் மீது  யாரும் புகார் கொடுக்காததால் அவரை எச்சரித்து காவல்துறை அனுப்பினர். பிறகு அந்த அப்பெண் கூறுகையில் , நான் வீட்டுக்கு சென்றால் உறவினர்கள் அடித்துக் கொன்று விடுவார்கள் எனவே நான் வீட்டிற்கு செல்லவில்லை என கூறினார்.

இதையடுத்து  அப்பெண்ணை மகளிர் காப்பகத்தில் போலீசார் தங்க வைத்தனர். அப்பெண்ணின் மகளை மேலப்பாளையத்தில் உள்ள அவரது உறவினர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Published by
murugan

Recent Posts

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

1 minute ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

27 minutes ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

2 hours ago

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை…எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

2 hours ago

மும்பை வேண்டாம் வேறு மாநிலத்துக்கு விளையாடப்போறேன்! அனுமதி கேட்கும் பிரித்வி ஷா!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…

3 hours ago

போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…

3 hours ago