Minister Senthl balaji [File Image]
அமைச்சர் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவ குழு ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறை நிர்வாக கட்டுப்பாட்டில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். ஜூன் 28வரை அவருக்கு நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பும், விசாரணைக்கு அனுமதி கேட்டு அமலாக்கத்துறையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை பிற்பகல் 3.30க்கு வரவுள்ளது.
இதற்கிடையில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நிலை குறித்தும், ஓமந்தூரார் அரசு மருத்துவ அறிக்கைகள் குறித்தும் எய்ம்ஸ் மருத்துவ குழு பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.
முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவ குழு பரிந்துரை செய்து இருந்தது. இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள செந்தில் பாலாஜி தரப்பு உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…