jaffer sadiq [File Image]
சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர்.
சென்னையை சேர்ந்த முன்னாள் அரசியல் பிரமுகர், திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் போதை பொருள் கடத்தப்பட்டதாகவும், இவர் மீது குற்ற வழக்குகள் பதியப்பட்டன.
டெல்லியில் உள்ள ஜாபர் சாதிக்கின் குடோன் போதை பொருள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாகவும் இதன் மூலம் வெளிநாடுகளுக்கு போதை பொருள் ஏற்றுமதி செய்யதும் இவர் மீது போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளால் பலவேறு வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதே, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு இடங்களில் சோதனை செய்து அதன் மூலம் ஆவணங்களை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, சட்டவிரோத பணம் பரிவர்த்தனை வழக்கில் ஜாபர் சாதிக் மனைவி அமீனாவிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது. இன்று பகல் 1 மணி அளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி அமினாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…